ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு சில வாரமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று 10 மணியளவில் பழனியம்மாள் உயிர் பிரிந்தது. இதையடுத்து சென்னையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்துக்கு வந்தார். தாயின் உடலை பார்த்து ஓ.பன்னீர்செல்வம் கதறி அழுதார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு பல தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்தனர்.
அண்மைச் செய்தி: ஈரோடு இடைத்தேர்தலில் திமுக ரூ.250 கோடி செலவு செய்துள்ளது – கே.சி.பழனிசாமி குற்றச்சாட்டு
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் சார்பில் ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி இறுதி மரியாதை செலுத்தினார்.







