ஐ டோன்ட் கேர் என இருந்தால் நாம் முன்னேறலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் ரூ. 340.21 கோடியில் 246 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ. 70.27 கோடியில் 91 முடிவுற்ற திட்டங்களை திறந்துவைத்தார். ரூ. 693.03 கோடியில் 1,71,169 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. தமிழக அரசு சார்பில் மதுரையில் நூலகம் அமைய உள்ளது. சென்னையில் உயர்மட்ட மதுரவாயல் துறைமுகம் மேம்பாலம் பணி தொடங்கப்படும். இந்த திட்டம் அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டது. திருவண்ணாமலையை மாவட்டமாக அமைத்தவர் கலைஞர். புதிய மருத்துவ கல்லூரி, செய்யாறு சிப்காட், திருவண்ணாமலை நகராட்சியில் 36 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம், போளூர் செண்பகத்தோப்பு திட்டம், வந்தவாசி அரசு கல்லூரி, ஆரணியில் அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி போன்றவை உருவாக்கப்பட்டதும், தொல்பொருள் துறையிடம் இருந்து அண்ணாமலையார் கோவிலை பாதுகாப்பதும் திமுக அரசுதான்.
1,131 பண்ணை குட்டைகள் வளர்த்து சாதனை படைத்தது திருவண்ணாமலை மாவட்டம். ஜவ்வாது மலையில் தேனீர் தோட்ட பூங்கா அமைக்கப்படும். இந்தியாவில் முதன்முறையாக பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி திறன் மேம்பாடு பாராட்டக்கூடியது. மாவட்டத்தில் ஆன்மீக பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் ஓதுவார் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் பழங்குடியினர் பகுதியில் 37 கோவில்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித் தரப்படும்.
மாவட்டத்தில் பல்வேறு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 75 ஆயிரம் மலைவாழ் மக்களின் வசதிக்காக திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களுக்கு ரூ. 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள்
வனத்துறை ஒப்புதலோடு தொடங்கப்படும். அனைத்து துறையையும் சமமாக வளர்ப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதால் எங்களுக்கு அழகு மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், வசதிகள், வேலை வாய்ப்புகள், புதிய முயற்சிகள், தமிழகம் முன்னேற செயல்படுவதுதான். திராவிட அரசியல் மரபு பொய்களை ஐ டோன்ட் கேர் என்று உண்மையாக நடந்தால் அனைவரும் முன்னேறலாம். அறிவார்ந்தவர்கள் பேசுவதை மட்டுமே நாம் காதில் கேட்போம். எங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் மக்களுக்குப் பணியாற்றி வருகிறோம் என்றார்.
-ம.பவித்ரா