சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஆர்.எம்.கதிரேசன், கல்வி துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். இந்நிலையில், அவரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார்.
இதற்கான கடிதத்தை ஆளுநரிடம் இருந்து கதிரேசன் பெற்றுக் கொண்டார். கதிரேசன் பதிவியேற்ற நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் துணை வேந்தர் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







