சென்னையில் ரயில் நடைமேடையில் பட்டா கத்திகளை உரசியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட மாணவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர், புறநகர் மின்சார ரயிலில் கும்மிடிப்பூண்டி முதல் கத்திவாக்கம் வரை பயணம் மேற்கொண்டனர். அப்போது, ரயிலில் படியில் நின்றபடி பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசியப்படி ஆபத்தான முறையில் சென்றனர்.
இது ரயிலில் பயணம் செய்தவர்களுக்கும், வெளியில் இருந்து வேடிக்கை பார்த்தவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை ரயில்வே காவல்துறையினர் பார்த்தும் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
கல்லூரி மாணவர்கள் சமீப காலமாக ரயிலில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயணம் மேற்கொள்ளும் வீடியோ வந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் சில மாணவர்கள் அத்துமீறி மோதலில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடும் மாணவர்களை காவல்துறையினர் தடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-இரா.நம்பிராஜன்








