சென்னையில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர்கள் எவ.வேலு, சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிககளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, மழைநீர் வடிகால் பணிகளை 15ம் தேதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளோம். சென்னையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் 90 சதவிகித பணிகள் நிறைவடைந்து இருந்தாலும், 10 சதவிகித பணிகள் நிறைவடையாமல் இருப்பதால், முழுமையாக பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடையும். இந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. மக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மழை நீர் வடிகால் செப்பனிடுவதாக இருந்தாலும், கழிவு நீர் வடிகால் சீர் செய்வதாக இருந்தாலும் 3 துறைகள் சேர்ந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. சென்னையில் கூவம் நதி தான் நகரை வியாபித்து உள்ளது. கழிவுகளை அங்கு விட வேண்டிய சூழல் உள்ளது. முதற்கட்டமாக அதில் உள்ள கசடுகளை அகற்றுவதன் மூலம் நீர் வழி பாதை சீர் செய்யப்பட்டு மழைக்காலம் முடிந்த உடன் கூவம் நதி சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு லண்டனுக்கு இணையாக சென்னை கூவம் நதியை பார்க்க முடியும்.
மதுரவாயல் துறைமுகம் சாலை 10 ஆண்டு காலம் கிடைப்பில் போடப்பட்டது. ஏற்கனவே இருந்த அரசாரங்கம் ஒத்துழைப்பு தரவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. தற்போதைய அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதால் மதுரவாயல், துறைமுகம் சாலைக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. 5600 கோடி ரூபாய் மதுரவாயல்- துறைமுகம் மேல்மட்ட சாலைக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 2024 ல் மதுரவாயல் உயர்மட்ட சாலை திறக்கும் வகையில் பணிகள் நடைபெற உள்ளது. சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது என்று கூறினார்.