சென்னை – மதுரை இடையேயான அதிவிரைவு ரயிலை, போடி வரை நீட்டிக்க தெற்கு
ரயில்வே திட்டமிட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு போடி – தேனி – மதுரை இடையே தொடங்கிய அகல ரயில் பாதை பணிகள்
அடுத்த ஆண்டு நிறைவடைந்த உடன் ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், திண்டுக்கல் – பழனி இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த உடன் சென்னையில் இருந்து பழனிக்கு ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சென்னை – மதுரை இடையேயான அதிவிரைவு ரயிலை, போடி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, தேனி – சென்னை இடையேயான புதிய ரயில் சேவையை 2022-ம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.