சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளையின் நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் உள்ளிட்ட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. நடனம் மற்றும் இசைக்கு புகழ்பெற்ற இந்த கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு இக்கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு தருவதாக ஆசிரியர் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டது. தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படியுங்கள் : ரூ.1000… 10 நாட்கள்… 38 மாவட்டங்கள்…. பிளாஸ்டிக் ஒழிப்புக்காக தமிழ்நாட்டையே சுற்றி வந்த அதிசய இளைஞர்!
இந்நிலையில் மாணவர்கள் அமைப்பு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர் உள்ளிட்ட நான்கு பேர் பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும், அவர்களை கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் நடன துறையின் தலைவர் ஜியோல்ஸ்னா மேனன் ஆகியோர் காப்பாற்றி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாலியல் புகாருக்கு ஆளான அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாணவிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில் மாணவர்கள் சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், புகாருக்கு உள்ளானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் நடைபெறும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.