36.6 C
Chennai
May 26, 2024
முக்கியச் செய்திகள் விளையாட்டு

சேப்பாக்கத்தில் மோதிக்கொள்ளும் சென்னை- ஐதராபாத் அணிகள் – டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப். 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை இன்று தொடங்குகிறது.

2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றைய டெல்லி – குஜராத் அணிக்கு இடையேயான போட்டியுடன் 40 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20  ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணியை வென்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்கு லக்னோ அணி முன்னேறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப். 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை, வரும் 25-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 10:40 மணிக்கு இணையதளத்தில் சிஎஸ்கே – எஸ்ஆர்ஹைச் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading