முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: டார்கெட் நிர்ணயத்த மாநகராட்சி!

சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதமும்
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதமும் விதிக்கப்படும் என
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலைப் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில்,

சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதமும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதமும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ. 500 அபராதமும் விதிக்கப்படும்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு ரூ. 5000 அபராதம், தனிநபருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், கட்டுப்பாட்டுப்பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு ரூ. 500 விதிக்கப்படும், வணிக கடைகளுக்கு ரூ. 5000 அபராதம் வசூலிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகம், பொது இடங்களில் கிருமிநாசினி அடிக்கடி தெளித்து சுத்தம்செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மண்டல வாரியாக நாள் ஒன்றுக்கு அபராத தொகைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்டலம்- 1 20,000
மண்டலம்- 2 20,000
மண்டலம்- 3 50,000
மண்டலம்- 4 60,000
மண்டலம்- 5 1,50,000
மண்டலம்-6 60,000
மண்டலம்- 7 60,000

மண்டலம்- 8 1,00,000
மண்டலம்- 9 1,500
மண்டலம்-10 1,25,000
மண்டலம்-11 25,000
மண்டலம்-12 25,000
மண்டலம்-13 75,000
மண்டலம்-14 40,000
மண்டலம்-15 40,000
மொத்தம்- 10,00,000

மண்டல அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அலுவலர்களைக் கொண்டு விதி மீறுபவர்களிடமிருந்து அபராதத் தொகையினை சென்னை மாநகராட்சி கருவூலத்தில் உடனுக்குடன் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

எத்திராஜ் கல்லூரி முதல்வர் கோதை மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Web Editor

நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வரும் செய்திகள் தவறானவை – குடும்பத்தினர் விளக்கம்!

Jeni

3 வது டெஸ்ட்: சரிந்தது இந்திய அணி, நிமிரும் இங்கிலாந்து

Gayathri Venkatesan