சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக இருவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த கேசவன் (50)
என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மார்க்நாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று சுமார் 90 அறைகளில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் இந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பட்டாசு
தயாரிக்கும் பணி வழக்கம் போல் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் உணவு இடைவெளிக்கு பின்னர் ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் வைத்திருக்கும் ஒரு அறையில் மூலப்பொருட்களில் தீடீரென உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலையில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின.இந்த வெடி விபத்தில் அலுவலக அறையில் இருந்த மார்க்நாதபுரத்தை சேர்ந்த கணக்காளராக பணியாற்றி வரும் ஜெயசித்ரா (24) என்ற பெண் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து 7000 பண்ணை காவல் நிலைய போலீசார் ஆலை உரிமையாளர் கேசவன் மற்றும் ஆலை போர் மேன் முனியசாமி ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த ஆலையின் உரிமம் கடந்த மார்ச் 31ஆம் தேதி உடன் நிறைவடைந்த நிலையில் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்காமலேயே சட்ட விரோதமாக இந்த ஆலை செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.