முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

சற்று குறைந்தது நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு: புதிதாக 10 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று உறுதி…

நாட்டின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 112 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று 12 ஆயிரத்து 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று சற்று குறைந்து புதிதாக 10 ஆயிரத்து 112 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 112 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 300-லிருந்து 5 லட்சத்து 31 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 81 ஆயிரத்து 877-லிருந்து 4 கோடியே 48 லட்சத்து 91 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 556 லிருந்து 67 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நேற்று, 10 ஆயிரத்து 765 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 833 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 899 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

4 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

Jeba Arul Robinson

உலகின் முதல்முறையாக 12K தரத்தில் தயாராகியுள்ள கமல்ஹாசனின் “ஹேராம்” திரைப்படம்!

Web Editor

முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய எல்ஐசி

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading