சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை 4வது கட்டமாக உயர்த்தும் முயற்சி வெற்றி – இஸ்ரோ

சந்திரயான் 3 விண்கலத்தை புவி சுற்றுவட்டப்பாதையின் 4வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 615 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3…

சந்திரயான் 3 விண்கலத்தை புவி சுற்றுவட்டப்பாதையின் 4வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 615 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்றுவட்டப்பாதையில் இது அன்றைய தினமே நிலைநிறுத்தப்பட்ட நிலையில், படிப்படியாக விண்கலம் அடுத்தடுத்த சுற்றுப்பாதைகளுக்கு உயரம் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையின் 4வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவுக்கு மேலும் ஒரு படி நெருக்கமாக சந்திரயான் 3 விண்கலம் சென்றுள்ள நிலையில், சர்வதேச நிலவு தினத்தை இந்தியா கொண்டாடுவதாக தெரிவித்துள்ள இஸ்ரோ, அடுத்தகட்டமாக வரும் 25ம் தேதி மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் சந்திரயான் – 3 விண்கலம் மேலும் உயர்த்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.