உக்ரைனில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இருநாட்டு ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இருநாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்தக் கோரி பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தி வந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: கோகுல்ராஜ் கொலை; யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு
இந்நிலையில், போரின் பத்தாவது நாளான இன்று, உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீட்புப்பணிகளை மேற்கொள்ளவும், தற்காலிகமாக போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக ரஷ்யா அதிபர் மாளிகை அறிவித்துள்ளதாக, அந்நாட்டு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி காலை 11.30 மணி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
உக்ரனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா சார்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தற்காலைக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.