முக்கியச் செய்திகள் இந்தியா சட்டம்

பல்வேறு தரப்பு ஆலோசனைகளுக்கு பிறகே CBSE தேர்வு ரத்து செய்யப்பட்டது – உச்சநீதிமன்ற நீதிபதிகள்

பல்வேறு தரப்பிலிருந்தும் ஆலோசனைகளை மேற்கொண்டு பிறகுதான் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யும் முடிவை எடுக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர்.

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள், நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, மத்திய அரசு தரப்பில், “நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பின் இக்கட்டான இந்த சூழலில் மாணவர்களின் உயிர் என்பது விலைமதிப்பற்றது. ஆகையால் அவர்களை கட்டாயம் தேர்வு எழுதச் சொல்லி நிர்ப்பந்திக்க முடியாது.” எனத் தெரிவிக்கப்பட்டது.

“தேர்வு எழுதும் ஒரு மாணவருக்கு ஏதாவது ஆனாலும் கூட அந்த மாணவரின் பெற்றோர்கள் தேர்வு நடத்தும் அமைப்பிற்கு எதிராக நீதிமன்றத்தை நாடி விடுவார்கள் அது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.” எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய அரசு தரப்பின் வாதத்தை கேட்ட பிறகு நீதிபதிகள் தெரிவித்ததாவது, “13 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே, சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. எனவே அதில் தலையிட விரும்பவில்லை.” எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதனையடுத்து இது தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…

Web Editor

“ரேஷன் அரிசியை விரும்பாத மக்கள் அதனை வாங்கி வீணாக்க வேண்டாம்”

G SaravanaKumar

”முல்லை பெரியாறு அணை உரிமைக்காக மீண்டும் போராட தயார்” – வைகோ பேச்சு

Web Editor