வெளியானது சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா & வெளிநாடுகளில் உள்ள 22,731 CBSE பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு முதல் பருவ பொதுத்தேர்வு கடந்த 2021 டிசம்பரில் நடத்தப்பட்டு…

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியா & வெளிநாடுகளில் உள்ள 22,731 CBSE பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு முதல் பருவ பொதுத்தேர்வு கடந்த 2021 டிசம்பரில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி இருந்தது. 2-ஆம் பருவ பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 வரை நடைபெற்ற நிலையில், 2-ஆம் பருவ பொதுத்தேர்வு முடிவுகளை மதிப்பீடு செய்வதிலும், முதல் பருவம் & 2-ஆம் பருவ தேர்வு முடிவுகளைக் கணக்கிடுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

அதேபோல, மிக நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டது. அதன்படி, ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா & வெளிநாடுகளில் உள்ள 22,731 பள்ளிகளைச் சேர்ந்த 21,09,208 மாணவர்கள் தேர்வு எழுதப் பதிவு செய்திருந்ததாகவும், 20,93,978 மாணவர்கள் தேர்வை எழுதியதாகவும், 19,76,668 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘’ஜாதி பாகுபாடு பார்க்காமல் பணியாற்ற வேண்டும்’ – அமைச்சர் கே.என்.நேரு’

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை, மாணவர்கள் https://cbseresults.nic.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக, மாணவர்கள் தங்களின் பதிவெண், பள்ளி எண், பிறந்த தேதி, நுழைவுச் சீட்டு எண் ஆகியவற்றைப் பதிவிட்டு https://cbseresults.nic.in/class-tenth/class10th22.htm என்ற இணைய முகவரியில் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். அதன்படி, சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வில், ஒட்டுமொத்தமாக 94.40% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் மட்டும் 98.97% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.