ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு

ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் மீது சென்னை சாஸ்திரி நகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 2D நிறுவனம் தயாரித்து இயக்குனர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம்…

ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் மீது சென்னை சாஸ்திரி நகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

2D நிறுவனம் தயாரித்து இயக்குனர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகியது. இந்த திரைப்படம் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜாகண்ணுவின் காவல் மரணத்தை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த குளஞ்சியப்பன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் ஜெய்பீம் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்தும் எழுதப்பட்டு காட்சியாக்கப்பட்டுள்ளது.அந்த திரைப்படம் இயக்குவதற்கு முன் படத்தின் இயக்குனர் ஞானவேல் தன்னை சந்தித்து பேசியதாகவும், அப்போது தனக்கு நடந்த அநியாயம் குறித்து எழுதிய கதை குறிப்பை அவர் தன்னிடம் வாங்கியதாவும் குளஞ்சியப்பன் குறிப்பிட்டுள்ளார். அதற்கு இயக்கினர் ஞானவேல் பணம் தருவதாகவும் ஒப்புக் கொண்டார். ஆனால், சொன்னபடி பணம் தரவில்லை.

இதனை அடுத்து சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே நீதிமன்றம் உத்தரவுப் படி இயக்குனர் ஞானவேல் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.