முக்கியச் செய்திகள் தமிழகம்

மெரினா கடற்கரையை பராமரிப்பதற்கு ஏன் குழு ஒன்றை அமைக்கக்கூடாது: நீதிபதிகள் கேள்வி

மெரினா கடற்கரையை துய்மையாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்செல்வி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, மெரினா கடற்கரையை பராமரிப்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை எனவும் நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர். மெரினா கடற்கரை முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை ஏன் அமைக்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மெரினாவில் குப்பை போடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறதா? மெரினா பராமரிப்புக்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது எனவும் நீதிபதிகள் வினவினர்.

வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ் மக்கள்போல தமிழில் பேச வேண்டும் என்பது எனது விருப்பம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Web Editor

என் வாழ்வில் இந்த 34 நாட்களை மறக்க முடியாது..! நெகிழ்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Web Editor

ஊரடங்கில் உணவைத் தேடி 130 கி.மீ ஹெலிகாப்டரில் பயணித்த முதியவர்!

Halley Karthik