அடுத்த 7 நாட்களுக்குள் நாடு முழுவதும் சிஏஏ அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More
இந்நிலையில் குடியுரிமை (திருத்த) சட்டம் அடுத்த ஏழு நாட்களில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மக்களவை எம்பியான சாந்தனு தாக்கூர் கூறியதாவது,
“அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. மதம், சமூகம் மற்றும் கொள்கைகளைக் கருத்தில் கொண்ட பிறகே சிஏஏ அமல்படுத்தப்படும். சிஏஏ சட்டத்தை திடீரென அமல்படுத்துவது நாட்டில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கலாம். தற்போது இந்த முடிவை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. சிஏஏ ஏழு நாட்களுக்குள் நாட்டில் அமல்படுத்தப்படும். நான் உங்களுக்கு இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளேன். அதை மாநிலத்தில் அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக முதலமைச்சரிடம் பேச வேண்டிய அவசியமில்லை. இது மத்திய அரசின் பிரச்னை.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.