உலகில் நீண்டகாலம் அரச பதவியில் இருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். 15 பிரிட்டன் பிரதமர்களைக் கண்ட அவருடைய வாழ்வின் அரிய தருணங்களையும், தமிழ்நாட்டின் இரண்டு முதலமைச்சர்களைச் சந்தித்துப் பேசியதையும் இந்த புகைப்படத் தொகுப்பில் பார்ப்போம்…
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் 1926ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி லண்டனில் பிறந்தார். அவருடைய பெற்றோர் கரங்களில்…
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1936ல் எலிசபெத்தின் தந்தை ஜார்ஜ் ஆறாம் மன்னராக பதவியேற்ற நிகழ்வில்…
இளவரசி எலிசபெத், சகோதரி மார்கரெட் உடன்…
சிறு வயதில், சிறுமியர் வழிகாட்டி(Girls Guides) அமைப்பின் சீருடையில்…
1942ல் பிரிட்டன் இளவரசிகள் எலிசபெத்தும் அவரது சகோதரி மார்கரெட்டும் ஒரு நாடகத்தில் நடித்த போது…
1947, தூரத்து உறவினரான பிலிப் மௌண்ட்பேட்டனை கரம் பிடித்தார் எலிசபெத்
1948ல் பிறந்த சார்லஸ், எலிசபெத்தின் கரங்களில் தவழ்கிறார்
தாயாருடன் மிகவும் நெருக்கமாக இருந்த எலிசபெத், 1951ஆம் ஆண்டு ஒரு திருமண நிகழ்வில் அவருடன் பங்கேற்ற போது…
1953 ஜூன் மாதம் வெஸ்ட்மினிஸ்டர் அபே-யில் இங்கிலாந்து ராணியாக முடிசூடிக்கொண்டபோது…
வேல்ஸ் இளவரசராக சார்லசுக்கு முடிசூட்டியபோது…
1961ஆம் ஆண்டு இந்தியப் பயணத்தின் போது சென்னைக்கு வந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், அப்போதைய முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரைச் சந்தித்துப் பேசினார்.
1981ல் சார்லஸ் – டயானா திருமணத்தின் போது…
இங்கிலாந்து ராணியின் அரண்மனையான பக்கிங்காம் அரண்மனை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்ட போது…
1983ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்த போது…
1997ல் கார் விபத்தில் இளவரசி டயானா மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு குவிந்த மலர்வளையங்களைப் பார்வையிட்ட போது…
1997ல் தமிழகம் வந்த போது அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி, மற்றும் நடிகர்கள் சிவாஜிகணேசன் உள்ளிட்டோர் இங்கிலாந்து ராணியைச் சந்தித்து கலந்துரையாடினர்.
2005ல் இளவரசர் சார்லஸ், கமிலா பார்க்கரை மறுமணம் செய்த போது…
2016ல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடும்பத்தினரோடு பங்கேற்ற ராணி
கணவர் பிலிப் மற்றும் கொள்ளு பேரக்குழந்தைகளுடன்… இங்கிலாந்து ராணிக்கு 4 குழந்தைகள், 8 பேரக் குழந்தைகள், 12 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர்.
2022 செப்டம்பர் – சில தினங்களுக்கு முன்பு பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ், இங்கிலாந்து ராணியைச் சந்தித்து பேசிய போது..
தமது வாழ்நாளில் இந்தியாவுக்கு மூன்று முறை வந்துள்ள இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்த கர்மவீரர் காமராஜர் மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரைச் சந்தித்துப் பேசியது நமக்கு பெருமைக்குரிய விஷயம் தானே…
-ஜெயகார்த்தி