தவறான சோதனை விபரங்களை தந்த பிரீத் அனலைசர் விவகாரத்தில் வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டால் மீண்டும் சோதனை நடத்தப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையின் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து
காவல்துறையினர் தினசரி வாகனத் தணிக்கை மேற்கொண்டு, மது போதையில் வாகனம்
ஓட்டுவர்களை பிரீத் அனலைசர் (Breath Analyser ) மூலம் உடலில் ஆல்கஹால் பயன்பாட்டை சோதனை செய்கின்றனர். இந்த கருவி மூலம் வாகன ஓட்டிகளிடம் சோதனைகள் மேற்கொண்டு, மது போதையில் வாகனம் ஓட்டியவர்களை கண்டுபிடித்து, வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இச்சோதனையின்போது இக்கருவியில் 30mg/100ml க்கு மேல் அளவீடு காண்பிக்கும்
வாகன ஓட்டிகள் மீது மதுபோதையில் வாகனம் ஒட்டியது தொடர்பாக மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்து அவர்கள் ஓட்டி வந்த வாகனம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையும் படியுங்கள்: மது அருந்தாத இளைஞரை பிரச்சிணையில் சிக்க வைத்த பிரீத் அனலைசர்- போலீசார் சோதனையில் ஏற்பட்ட பரபரப்பு!
இதனால் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தாமாக விபத்து ஏற்படுத்திக் கொள்ளாமலும், மற்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திடாமலும், தடுக்கப்பட்டு மனித உயிர்களும் உடல் பாதிக்கப்படாமலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 30mg/100ml என்ற அளவீடுக்கு குறைவாக காண்பிப்பவர்கள் மீது வழக்கு எதுவும் பதியப்படுவதில்லை
நேற்று முன் தினம் இளைஞர் ஒருவர் மது அருந்தாத நிலையில் பிரீத் அனலைசர் கருவி மது அருந்தியதாக தவறாக காண்பித்ததால் போலீசார் அபாரதம் விதித்தனர். இதனால் போலிசாருக்கும் அவருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் மற்றொரு கருவி மூலம் சோதனை செய்ததில் அவர் மது அருந்தவில்லை எனவும் கருவி தவறாக காண்பிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது
ஆகவே காவல்துறையின் சோதனையின்போது வாகன ஓட்டிகளுக்கு 30mg/100mlக்கு மேற்பட்ட அளவீடு காண்பித்தால், வாகன ஓட்டிகள் மீண்டும் ஒரு முறை இக்கருவியின் மூலம் பரிசோதனை செய்ய கேட்டுக் கொண்டால் காவல் குழுவினர் அந்த வாகன ஓட்டியை மீண்டும் Breath analyser கருவி மூலம் சோதனை மேற்கொள்ள போக்குவரத்து காவல் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆகவே வாகன ஓட்டிகள் சந்தேகத்தின் பேரில் மீண்டும் சோதனை மேற்கோள்ள கேட்டுக்
கொண்டால் மறுமுறையும் இக்கருவி மூலம் சோதனை செய்யப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.