ஆறு நாள்களுக்கு பிறகு சசிகலாவிற்கு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். மேலும் ஆறு நாள்களுக்கு பிறகு சசிகலாவிற்கு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 278ஆக இருப்பதால் அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டு வருவதாகவும், தொடர் சிகிச்சையால் சசிகலா நலமுடன் உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.







