32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள்

கச்சத்தீவில் கைவைத்த அண்ணாமலை !

தமிழ்நாட்டில் பாஜக வலுவாக காலுன்ற என்ன செய்ய வேண்டும் என்ற மாஸ்டர் பிளானை பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார் என்ற தகவல் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ போல் பரவி வருகிறது. பாஜக தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்திற்குள் நுழைய முடியாது. இது பெரியார் மண் என திராவிட முன்னேற்ற கழகம் நீண்ட நாட்களாக கூறி வருகிறது. அதற்கேற்ப முதலமைச்சர் முக ஸ்டாலினின் நடவடிக்கைகளும் உள்ளன. இந்த நிலையில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலையின் இலங்கை பயணம் அமைந்ததாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். அண்ணாமலை இலங்கை பயணத்திற்கும், தமிழக அரசியலுக்கு என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுவது இயல்பே. அதற்கு அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதமே கச்சத்தீவு. இதை பற்றி விவரிக்கிறார் இராமானுஜம்.

’இலங்கையைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று அனுமன் எப்படி சஞ்சீவி மலையைச் சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சுமக்க பாரத பிரதமர் மோடியும் தயாராகவே இருக்கிறார்.” என தமது இலங்கை பயணத்தின்போது கூறினார் அண்ணாமலை. அவர் என்ன சொல்ல வருகிறார் என விசாரித்தபோது, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தேவையான பல்வேறு உதவிகளை வழங்குவதோடு மட்டுமில்லாமல், ஈழப்போரில் இன்னலுக்கு உள்ளாகியுள்ள தமிழர்கள் வாழ்வை மேம்படுத்த மத்தியில் ஆளும் பாஜக மூலம் இலங்கைக்கு உதவுவது என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். இலங்கையில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தில் இருக்கும்போதுதான் தமிழ்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் ஈழத் தமிழர்களுக்கு உதவுவது மூலம் பாஜகவால் தமிழகத்தில் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியோடு பாஜக மூத்த நிர்வாகிகள் சிலருடம் பேசினோம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவர்கள் கூறியதாவது, அண்ணமலை, மலையகத் தமிழ் எம்.பி-க்களின் அழைப்பின் பேரில் மட்டுமல்லாமல், வேறு சில காரணங்களுக்காகவும், அரசியல் திட்டங்களுக்காகவும் பாஜக சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்கின்றனர். அதாவது இலங்கையில் வட பகுதி மீனவர்கள் அதிகம் பயன்படுத்தி வரும் கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் மீண்டும் இணைத்துவிட்டால் அது தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டார். இதுவே இன்று தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது சந்திக்கும் பல்வேறு இன்னல்களுக்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே வரும் 2024ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க இந்தியா உதவ வேண்டும். அதற்கு பிரதிபலனாக கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என அண்ணாமலை பாஜகவின் சாணக்கியர் அமித் ஷாவிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. அதனை அப்படி ஏற்றுக்கொள்ளும் முடிவில் அமித்ஷா உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும்போது நாங்கள் ஆட்சியில்லை என்பதை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியே பலமுறை கூறிவிட்டார். இருந்தாலும் அரசியல் காரணங்களுக்காக எங்கள் மீது பழி போடுகின்றனர். எங்களை பொறுத்தவரை பாஜக தமிழ்நாட்டில் காலுன்ற முடியாது என ஆணித்தரமாக கூறுவதற்கு காரணமே, அவர்கள் மாநில நலன்களை, குறிப்பாக தமிழ்நாட்டின் நலன்களை புறக்கணிப்பதே என்றனர். யார் வேண்டுமானாலும் தமிழக அரசியலில் கால் பதிக்கலாம். அதற்கு அவர்கள் செய்ய வேண்டிய முக்கிய பணி தமிழர்கள் நலன் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்றனர்.

இதற்கிடையே,  இலங்கை வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இந்தியாவிற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாஜத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க செயலாளர் என்.எம்.ஆலம் கூறுகையில், கச்சத் தீவு பகுதி இந்தியாவிற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட இருப்பதாக ஊடகங்கள் வாயிலாகவும், மன்னார் மாவட்ட மீனவர்கள் மூலமாகவும் அறிகிறோம். இதனுடைய உண்மைத் தன்மையானது மீனவர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களாக செயல்படும் எங்களுக்கே இன்னும் தெரியாது. இருந்தாலும் இந்தியாடர்ச்சியாக  கச்சத்தீவை இந்திய மீனவர்களுக்கு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இன்று நாட்டின் ஏற்பட்டிருக்க கூடியபொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இந்த அரசாங்கத்தில் கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தவர்கள், நிதியமைச்சராக இருந்தவர்களின் தன்னிச்சையான செயல்பாட்டினால் ஏதோ ஒரு  முக்கிய விஷயம் கச்சத்தீவு தொடர்பாக பேசப்பட்டு கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இந்த கச்சத்தீவு இந்தியாவிற்கு  திரும்ப வழங்கப்பட்டால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என அவர் கூறினார்.  இதனால் பாதிக்கப்படப்போவது இலங்கை வட பகுதி மீனவர்கள் மட்டுமல்ல இலங்கை  முழுவதுமாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது என அவர் கூறுகிறார்.

இலங்கை மீனவர்கள் ஒருபுறம் எதிர்ப்பு தெரிவித்தாலும், தமிழக மீனவர்களின் நீண்ட கோரிக்கையான கச்சத்தீவை யார் மீட்டு கொடுத்தாலும் அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எண்ணமாக உள்ளது. அண்ணாமலை அஸ்திரம் ஆயுதமா ? புஷ்வானமா என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும். எதையும் தாங்கும் இதயத்தை கொண்ட தலைவரின் கட்சி இதற்கு என்ன ரியாக்ட் செய்ய போகிறது என்பதே இப்போது அரசியல் வானில் வட்டமிடும் கேள்விகளாக உள்ளன.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading