கர்நாடகாவில் அசுர பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் பரப்புரையின்போது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
கர்நாடகாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திருமாவளவனுடன் நமது நியூஸ்7 தமிழ் சிறப்பு செய்தியாளர் வசந்தி கலந்துரையாடினார். அப்போது பேசிய திருமாவளவன், ”கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அசுர பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக கர்நாடக மக்களிடையே வெறுப்பை சம்பாதித்துள்ளது. நிச்சயமாக இந்த தேர்தலில் பாஜகவுக்கு கர்நாடக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக வலுவாக இல்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும்.
இதையும் படியுங்கள் : NCL 2023 : அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி மதுரை சவுராஷ்டிரா கல்லூரி அசத்தல்
பிரதமர் எத்தனை முறை கர்நாடகாவிற்கு வந்தாலும் தேர்தலில் வெற்றி கிடைக்காது. பாஜக நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அளித்துள்ளது. காங்கிரஸ் மக்களுக்கு ஏற்ற வாக்குறுதிகளை அளித்துள்ளது. எனவே காங்கிரஸை நம்பி மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
விசிக தலைவர் திருமாவளவன் நியூஸ்7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியைக் காண :