கர்நாடகா முழுவதுமே மக்களின் பேராதரவு பாஜகவிற்கு இருப்பதால், தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டிலிருந்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் கர்நாடகாவுக்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன், விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன், எம்பி ஜோதிமணி என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தாங்கள் ஆதரிக்கும் கட்சிக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார் ஸ்ரேயா – அரசு உதவினால், பல சாதனைகளை படைப்பேன் என பேட்டி
அந்த வகையில் பாஜகவை ஆதரித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் நமது சிறப்பு செய்தியாளர் வசந்தி கலந்துரையாடினார். அப்போது பேசிய எல்.முருகன், “கர்நாடக முழுவதுமே மக்களின் பேராதரவு பாஜகவிற்கு இருக்கிறது. இதனால் இந்த தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும்.
பிரதமர் நரேந்திர மோடி, வரலாற்றில் முதல் முறையாக 36 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, மக்களை நேரடியாகச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பிரதமரை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். நாங்கள் அறிவித்தது இலவசங்கள் அல்ல. மக்களை மேம்படுத்தும் நலத்திட்டம். பாஜகவின் திட்டங்கள் 100 சதவிகிதம் பயனாளிகளைச் சென்றடைகின்றன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை போலியானது என்பதை காட்டவே, அந்த அறிக்கை எரிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
இதுகுறித்த முழு வீடியோவைக் காண :