தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் – பொன்முடி

பெரியார் அண்ணா வழியில் தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் சென்னை அடுத்த செம்மஞ்சேரில் பல்கலைக்கழக துவக்க நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேச்சு. சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் இயங்கி வரும்…

பெரியார் அண்ணா வழியில் தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் சென்னை அடுத்த செம்மஞ்சேரில் பல்கலைக்கழக துவக்க நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேச்சு.

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் இயங்கி வரும் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நடந்த ஜேப்பியார் பல்கலைக்கழக துவக்க விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பெரியார் அண்ணா வழியில் தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும். அவரவர் தாய்மொழியில் அவரவர் படிப்பது அவர்களின் விருப்பம் ஆனால் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தமிழ் ஆங்கிலம் மட்டுமே கல்விக்கான பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து பல்கலைக்கழகங்களில் இரு மொழி கொள்கை சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க அரசு சார்பாக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இனி வரும் காலங்களில் பல்கலைக்கழகங்களில் இந்த குழு ஆய்வு மேற்கொள்ளும் எனவும் கூறினார்.மேலும் திராவிட மாடல் ஆட்சியில் தான் பெண்களுக்கான கல்வி மேம்படுத்தப்பட்டது.இதை தொடர்ந்துதான் தமிழக முதல்வர் பெண்களின் கல்வி மேம்பட அரசு கல்லூரியில் பயின்ற மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகத்தான திட்டத்தை கொண்டு வந்தார்.

பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த பெண் கல்வியை திராவிட மாடல் ஆட்சி தான் மேம்படுத்தி உள்ளதாகவும் கல்வியிலும் வேலைவாய்பிலும் மட்டும் உங்களை தகுதி படுத்திக் கொள்ளாமல், நீங்களும் தொழில் முனைவோர்களாக மாறி உங்களால் பல பேருக்கு வேலை வாய்பு அமைத்திட தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு பொன்முடி, அறிவுரை வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.