இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து, பிபிசி வெப்சைட் மற்றும் சேனல்கள் இருளில் மூழ்கின.
இங்கிலாந்து ராணியின் மரணம் ஏற்பட்டால் பிபிசி போன்ற ஊடக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய கடுமையான நெறிமுறைகளின் பட்டியலில் இது முதல் படியாகும்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராணி எலிசபெத் மறைவை ஒட்டி பிபிசி செய்தி நிறுவனம் தனது வெப்சைட் லோகோவை கருப்பு நிறத்திற்கு மாற்றியது, அதேபோல் பிபிசி செய்தி தொலைக்காட்சியிலும் தொகுப்பாளர்கள் கருப்பு நிற ஆடையை அணிந்து வந்தனர்.
இந்த நிகழ்வு ராணியின் உடல்நிலை மோசமான உடனே கடைபிடிக்கபட்டது, இப்பொழுது ராணியின் மறைவை அதிகாரபூர்வமாக அறிவித்த பின்னர் சரியாக 9.45AM (லண்டன் நேரப்படி), லோகோ மாற்றப்பட்டது. பிபிசியில், தேசிய அவசரநிலைகளைக் குறிக்கும் அலாரம் உள்ளது. அங்கு பணிபுரியும் பலருக்குமே அது எப்படி இருக்கும் என்று தெரிந்து இருக்க வாய்ப்பில்லை , ஆனால் ராணி இறந்தவுடன் அது மாற்றப்பட்டுவிட்டது . அந்த நேரத்தில், வழக்கமாக சிவப்பு நிறத்தில் இருக்கும் பிபிசியின் லோகோ கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் அனைத்து அறிவிப்பாளர்களும் கருப்பு உடைகள் மற்றும் டைகளில் மாறினார்கள்.
ராணியின் மரணம் ஏற்பட்டால் பிபிசி போன்ற ஊடக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய கடுமையான நெறிமுறைகளின் பட்டியலில் இது முதல் படியாகும். மேலும் மதியத்தின் பெரும்பகுதிக்கு ஒரு சிறப்பு செய்தி நிகழ்ச்சிக்கு வழிவகை செய்ய வழக்கமான நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பிபிசி அதன் ரேடியோ அலர்ட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்தை பிரகடனப்படுத்தியது ,இது ஒரு பனிப்போர்-கால அலாரம், இது நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் அறிந்திருந்தாலும், இதுவரை பார்த்ததில்லை.