பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்குக் கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்ததைக் கண்டித்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மனித நேய மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செயலாளர் அப்துல்சமது, துணை பொதுசெயலாளர் யாக்கூப் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, தமிழ்நாடு முஸ்லீம் மகளிர் பேரவை மாநில பொருளாளர் திருச்சி ஷான்ராணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தாம்பரம் சண்முகம் சாலையிலிருந்து, பிரதான பேருந்து நிலையம் வரை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பெண்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்து இஸ்லாமியக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மூசா தலைமையில் நடைபெற்ற இந்த
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.