கண்டாச்சிபுரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் ஆட்டோ நிறுத்த அனுமதிக்காததால் கடந்த பத்து நாட்களாக வாழ்வாதாரமின்றி தவிப்பதாக கூறி ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஒருவாரத்திற்கு மேலாக அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்பு மோதலுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து போலீசார் உரிய அனுமதி இல்லாத இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி வைக்க கூடாது என எச்சரிக்கை செய்து சாலையில் வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய ஆட்டோக்களை போலிசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் பத்து நாட்களாக கண்டாச்சிபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் ஆட்டோக்ககளை ஓட்டாமல் நிறுத்தி வைத்துள்ளனர். ஆட்டோக்கள் இயங்காத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கண்டாச்சிபுரத்தை சேர்ந்த செந்தில் என்பவர் கண்டாச்சிபுரம் பகுதியிலுள்ள பி.எஸ்.என்.எல் டவர் மீது ஏறி 10 நாட்களுக்கும் மேலாக தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டடார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆட்டோ ஓட்டுனரிடம் சமானதான பேச்சுவார்த்தை நடத்தி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மீண்டும் இடம் பார்த்து புதிய இடத்தில் நிறுத்தி கொள்ள வழிவகை செய்யப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர் டவரில் இருந்து இறங்கினார். கீழே இறங்கிய நபரிடம் போலீசார் அறிவுரை கூறி மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரிக்கை செய்தனர்.