நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கண்டிப்பாக எடுத்தாக வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
“இதுபோன்ற மழைக்காலங்களில் குழந்தைகளை பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போன்று தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆகவே அந்த இடத்துக்கு செல்ல கூடாது. மழை பெய்யும் நேரத்தில் தொலைக்காட்சியும் பார்க்க கூடாது எனவும், மின்சாதனம் இருக்கும் இடத்தில் அருகில் நிற்க கூடாது எனவும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோன்று, கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த மழையின் காரணமாக அனைத்து வாகனங்களும் சீர்குலைந்து போனது. ஆகவே, தங்களுடைய உடைமைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களுடைய இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மேடான பகுதிகளில் முன்னதாகவே நிறுத்த வேண்டும்.
மேலும், பொதுமக்கள் கீழ்த்தளத்தில் இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய முக்கியமான ஆவணங்கள் பொருட்களை மேல்தளத்தில் வைத்துக் கொள்வது நல்லது. இதையும் மீறி வேறு ஏதேனும் சிரமம் இருந்தால் காவல்துறை என்னைத் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். அதற்காக 100, 101, 108, 112 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொலை பேசியில் அழைத்தாள் அதில் அதிரடி வீரர்கள், நீச்சல் வீரர்கள், உயிர் காக்கும் வீரர்கள், மாநில மீட்பு துறையினர் ஆகியோர் தயார் நிலையில் இருக்கின்றார்கள்.
இந்த இரண்டு நாட்களை எளிதில் கடந்து பாதுகாப்பாக இருப்போம்” என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.