தமிழ் நிலைத்திருக்கும் வரை ம.பொ.சி-யின் புகழும் நிலைத்திருக்கும் – அண்ணாமலை…!

தமிழும் தமிழர் பண்பாடும் நிலைத்திருக்கும் வரை, ம.பொ.சி-யின் புகழும் நிலைத்திருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சிறந்த தமிழறிஞரும், எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான, ஐயா ம.பொ.சி. அவர்களின் பிறந்த தினம் இன்று.

மொழிவாரி மாநில மறுசீரமைப்பின்போது, சென்னை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் தமிழகத்தின் அங்கமாகத் திகழ, முக்கியப் பங்காற்றியவர். வரலாற்றில் முதன்முறையாக சிலப்பதிகார மாநாட்டை நடத்தி, ‘சிலம்புச் செல்வர்’ என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர்.

தமிழும் தமிழர் பண்பாடும் நிலைத்திருக்கும் வரை, ஐயா ம.பொ.சி. அவர்களின் புகழும் நிலைத்திருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.