நாளை தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மேளதாளங்கள் முழங்க, பரதநாட்டியம், கரகாட்டம் என கலைநிகழ்ச்சிகளுடன் அமோக வரவேற்பளிக்க பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகிறார். சென்னை விமான நிலைய புதிய முனையம், சென்னை – கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை வாரம் 3 முறை விரைவு ரயில் சேவை ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதேபோல திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி முடிக்கப்பட்டுள்ள அகலப்பாதையை துவக்கி வைக்க உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமரை வரவேற்பதற்காக தமிழ்நாடு பாஜக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக சாலையின் இருபுறங்களிலும், அன்பின் மிகுதியில் பொதுமக்களும், பாஜக கட்சியின் தொண்டர்களும் திரளாக நின்று வரவேற்க இருக்கிறார்கள்.தமிழ்நாடு மக்கள் மீது தனிப்பட்ட அன்பும், மரியாதையும், பாசமும் கொண்ட பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பரதநாட்டியம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், மேளதாளங்கள் என்று பிரதமரின் வாகனம் செல்லும் பாதை எல்லாம் வண்ணக்கோலங்கள் ஆக, திரும்பும் திசையெல்லாம் திருவிழாவாக மகத்தான வரவேற்பளிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பாஜகவின் ஒவ்வொரு அணி மற்றும் பிரிவின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என்று அனைவரும் வெற்றிகரமாய் இந்த வரவேற்பினை நிகழ்த்திக் காட்டிட வேண்டும் என பாஜக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.