வீட்டில் போதைப் பொருள்: பிரபல நடிகர் அதிரடி கைது

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை வைத்திருந்ததாக பிரபல பாலிவுட் நடிகர் அர்மான் கோலி இன்று கைது செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களாக பாலிவுட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.…

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை வைத்திருந்ததாக பிரபல பாலிவுட் நடிகர் அர்மான் கோலி இன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த சில மாதங்களாக பாலிவுட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவை அடுத்து இந்த சோதனை அதிகரித்து வருகிறது. சோதனையை அடுத்து சில நடிகர், நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போதைப் பொருள் தடுப்பு போலீசார், பிரபல இந்தி நடிகர் அர்மான் கோலியை இன்று கைது செய்துள்ளனர். பாலிவுட் நடிகர் அர்மான் கோலி, இந்திப் பட இயக்குநர் ராஜ் குமார் கோலியின் மகன் ஆவார்.

ஏராளமான படங்களில் நடித்துள்ள அவருடைய, வீட்டில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார், நடிகர் அர்மான் கோலியை விசார ணைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் 12 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.