அரியலூர் அருகே பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
அண்மை காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகளில், ஆலைகளில் என ஏற்படும் திடீர் தீ விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில், பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு, 14 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதையும் படியுங்கள் : ”ஜிகர்தண்டா டபுள் X” திரைப்படத்தின் ’மாமதுர’ பாடல் வெளியானது…
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை 15 க்கு மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வந்தனர். அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருமானூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீதி உள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவையும் எரிந்து சேதமடைந்தன.