29.2 C
Chennai
May 20, 2024
இந்தியா குற்றம் செய்திகள் வணிகம்

சரக்கு வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்த பிஸ்கெட் பாக்கெட்டுகள் – அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் சரக்கு வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பிஸ்கெட் பாக்கெட்டுகளை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர்.

ராஜமுந்திரியில் இருந்து துனி என்னுமிடத்திற்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு வாடகைக்கு ஓட்டுநர் ஒருவர் தனது சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தார். பிஸ்கெட் பாக்கெட்டுகள் அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு கயிறு மூலம் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்து கட்டப்பட்டிருந்தது.

அந்த வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தப்போது எதிர்பாரதவிதமாக கயிறு அவிழ்ந்து பிஸ்கெட் பாக்கெட்டுகள் சாலையில் சிதறி விழுந்தன.அதனை பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் ஓட்டுநருக்கு தகவலளிக்காமல் வந்தவரை லாபம் எனக்கருதி அள்ளிச் சென்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிறிது நேரம் சென்ற பின்னரே நிலைமையை உணர்ந்த ஓட்டுநர் திரும்பி வந்துப் பார்த்தப் போது கார்களில் சென்றவர்கள் கூர மனமில்லாமல் இந்த ஐந்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட்டுகளை அள்ளிச் சென்றனர். இதனை பார்த்த ஓட்டுநர் என்ன சொல்வதென்றே தெரியாமல் மனம் வெம்பியப்படி சென்றார்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading