அதிமுக குறித்த பாமக தலைவரின் விமர்சனத்திற்கு, அன்புமணி நடந்ததை நினைத்து பார்கணும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறியுள்ளார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக 4 பிரிவுகளாக உள்ளது என அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு பதிலளித்தார். ஒரு பக்கம் வருத்தமும், வேதனை உள்ளது. மறுபக்கம் பாமக தலைவர் அன்புமணியின் பேச்சு கண்டனத்திற்குரியது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், அன்புமணி ராமதாஸ் ஏறி வந்த ஏணியை மறக்கலாமா? அன்புமணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கீகாரம் யார் கொடுத்தது அதிமுக தான். அதிமுகவை சிறுமைப்படுத்தும் செயலை அன்புமணி செய்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும். அதிமுக செய்ததை அன்புமணி நினைத்து பார்கணும், நன்றி மறந்த பாமக என விமர்சித்தார்.
மேலும், இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றி தர வேண்டும். வாக்குறுதி கொடுத்த திமுக அதை நிறைவேற்றி தர வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் அமைத்துள்ள குழு கண் துடைப்பு குழு. இது விடியா அரசு. இந்த ஆட்சியில் மோசமான நிர்வாகம் நடக்கிறது என்று கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் கடிதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை. அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், போலியான அரசியல் செய்வது தான் ஒபிஎஸ் வாடிக்கை.
ஒபிஎஸ் குருப் வெங்காயம், உரிக்க உரிக்க ஒன்றுமில்லை என கூறினார். மேலும் அம்பேத்கர் சிலை சேதத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார், தலைவர்கள் சிலையை சேதப்படுத்துவது ஈனத்தனமான செயல் என விமர்சித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக சார்பாக நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக நான்காக பிரிந்துள்ளது என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.