முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து பெற்றார்.
சென்னையில் நேற்று நடந்த பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை அன்புமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, பாமகவின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உடனிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரும் வாழ்த்தினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு, அரசியல் எதுவும் பேசவில்லை. பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பு குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டமாக, கிராமமாக சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளேன்” என்றுப் தெரிவித்தார்.
கடந்த 25 வருடங்களாக தற்போதைய கௌரவ தலைவர் ஜி.கே.மணி சிறப்பாக செயல்பட்டு வந்தார். பாமக 2.0 என்ற புதிய அத்தியாயத்தை கொண்டு என்னை நேற்று புதிய தலைவராக பொறுப்பேற்க வைத்தனர். மக்களின் அன்றாட பிரச்சினைகளை சரி செய்து, மக்களின் ஆதரவை பெற போகிறோம். இனி பாமக 2.0 செயல் திட்டத்தை படிப்படியாக தமிழகத்தில் செயல்படுத்த உள்ளோம் என்றும் அன்புமணி கூறினார்.
இதனைத் தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் பாமக தலைவர் அன்புமணி சந்தித்து வாழ்த்து பெற்றார்.