30 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னை தரமணியில் மழை பாதிப்புகள் குறித்து அன்புமணி ஆய்வு – மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்..!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை தரமணி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து,  மாநகராட்சி ஊழியர்களும்,  தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. வெள்ளம் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

இதையும் படியுங்கள் : மிக்ஜாம் புயல் : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 3வது நாளாக முதலமைச்சர் ஆய்வு..!

இந்நிலையில், சென்னை தரமணி பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த அன்புமணி ராமதாஸ், மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading