7 மாத கன்றுக் குட்டியை அடித்து கொன்ற முதியவர் கைது!

மதுரையில் தான் வளர்த்த பசு மாட்டிடம் மற்றொருவரின் கன்றுக்குட்டி பால் குடித்ததாகக் கூறி 7மாத பசுங்கன்று குட்டியை அடித்து கொன்ற சம்பவத்தில் சிசிடிவி காட்சி அடிப்படையில் காதர் சுல்தானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை…

மதுரையில் தான் வளர்த்த பசு மாட்டிடம் மற்றொருவரின் கன்றுக்குட்டி பால் குடித்ததாகக் கூறி 7மாத பசுங்கன்று குட்டியை அடித்து கொன்ற சம்பவத்தில் சிசிடிவி காட்சி அடிப்படையில் காதர் சுல்தானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாநகர் கிழக்கு வெளி வீதியைச் சேர்ந்த சிக்கந்தர் சேக் அப்துல்லா என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்துவருகிறார். இவருக்கு ஆடு மாடுகளை வளர்ப்பதில் ஆர்வம் இருந்ததால் தனது. வீட்டின் அருகே போதிய இட வசதி இல்லாததால் வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் வளர்த்துவந்துள்ளார். இந்நிலையில், அப்துல்லா வளர்த்து வந்த 7 மாத பசுங்கன்றுகுட்டி கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளது. இது குறித்து அருகில் உள்ளவர்களிடம் சிக்கந்தர் சேக் அப்துல்லா விசாரித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?’

அப்போது, நெல் பேட்டை பகுதியைச் சேர்ந்த காதர் சுல்தான் (65) என்ற முதியவர் தான் வளர்த்துவரும் பசு மாட்டிடம் நீங்கள் வளர்க்கும் பசுங்கன்று தினசரி வந்து பால் குடித்துவிட்டு அடித்ததாகவும், இது குறித்துப் பேசினால் உன்னையும் கன்றுக்குட்டியை அடித்தது போல அடிப்பேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து கொல்லப்பட்ட 7மாத பசுங்கன்றுவின் உரிமையாளர் சேக் அப்துல்லா விளக்குத்தூண் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காதர் சுல்தானைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.