முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

அம்பேத்கர் படம் அகற்றப்படாது – சட்ட அமைச்சர் ரகுபதியிடம் தலைமை நீதிபதி உறுதி

நீதிமன்ற வளாகங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படாது  என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதியிடம் தலைமை நீதிபதி உறுதி அளித்துள்ளார்.

நீதிமன்றத்தில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் அல்லது சிலை தவிர வேறு படங்கள் சிலைகளுக்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு முதலமைச்சரின்  அறிவுறுத்தலின்படி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள்  உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி  சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவைச் சந்தித்து இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தலைமை நீதிபதியிடம்  அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை  சட்டத்துறை அமைச்சர்  கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி  நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்! கொளத்தூர் மணி கடிதம்!

Web Editor

“சென்னையில் குறைந்து வரும் கொலைகள்” – ஆணையர் சங்கர் ஜிவால்

Web Editor

முதல்படம் வெளியாகும் முன்பே 2-ஆம் திரைப்படத்தை தொடங்கிய ராட்சசன் பட உதவி இயக்குநர்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading