புதுச்சேரிக்கு ஜூலை 2 வரை விமான சேவைகள் ரத்து!

புதுச்சேரியில் விமான நிலைய பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 2-ம் தேதி வரை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேயில் இருந்து ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு…

புதுச்சேரியில் விமான நிலைய பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 2-ம் தேதி வரை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேயில் இருந்து ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வருகிற ஜூலை 2-ம் தேதி வரை விமான சேவை தற்காலிமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய பராமரிப்பு பணி காரணமாக புதுச்சேரியில் இருந்து ஐதராபாத் மற்றும் பெங்களூரு செல்லும் விமானங்களை ஜூலை 2-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் ஜூலை 3-ம் தேதியிலிருந்து அவை மீண்டும் இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. விமான சேவை திடீரென்று ரத்து செய்யப்படுவதால் விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.