டெல்லி, அரியானாவில் தொடர்ந்து மோசமடையும் காற்று தரக்குறியீடு

டெல்லி, அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து காற்றின் தரம் குறைந்து காணப்படுவதாக மத்திய புவி அறிவியல் அமைச்சம் தெரிவித்துள்ளது. டெல்லியில் தொடர்ந்து காற்று தர குறியீடு சில நாட்களாக மோசமடைந்து வருகிறது. காற்று…

டெல்லி, அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து காற்றின் தரம் குறைந்து காணப்படுவதாக மத்திய புவி அறிவியல் அமைச்சம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் தொடர்ந்து காற்று தர குறியீடு சில நாட்களாக மோசமடைந்து வருகிறது. காற்று மாசுபாட்டை குறைக்க விவசாய பொருட்கள் எரிக்க தடை, கட்டுமான பணிகளுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை டெல்லி அரசு கையாண்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய புவி அறிவியல் அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் தொடர்ந்து காற்றின் தரம் குறைந்து வருகிறது. இதன்படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு 431 ஆக உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று உத்தர பிரதேசத்திற்கு உட்பட்ட நொய்டா நகரில் காற்று தர குறியீடு 529 ஆக பதிவாகி உள்ளது. அரியானாவுக்கு உட்பட்ட குருகிராம் நகரில் 478 ஆன கடுமையான பிரிவிலும், அதற்கருகே உள்ள தீர்ப்பூர் நகர் 534 ஆகவும் கடுமையான பிரிவிலும் உள்ளன. டெல்லியில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே பனி சூழ்ந்தது போன்ற காட்சிகள் காலையிலேயே காணப்படுகின்றன. இதனால், வாகனங்களில் பயணிப்பவர்கள் மெதுவாகவே செல்கின்றனர்.

சமீபத்தில், உலக காற்று தர குறியீடு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, காற்று மாசுபாட்டில் இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10-ல் இடம் பெற்று அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனினும், இதில் டெல்லி இடம்பெறாமல் இருந்தது. ஆனால், தீபாவளி நாளில் அதிக மாசுபாடுடைய நகரங்களின் வரிசையில் டெல்லி முதல் இடம் பிடித்து விட்டது என அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

தீபாவளி பண்டிகையின் போத பட்டாசு வெடிக்க தடை, அபராதம் என விதிக்கப்பட்ட போதும், அதனை மீறி பல பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதையடுத்து டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று தர குறியீடு கடுமையாக மோசமடைந்து உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.