மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் விமான படைக்கு சொந்தமான விமானங்கள் விபத்துக்குள்ளானது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட சுகோய்-30 மற்றம் மிராஜ்-2000 என்ற இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. மொரானா என்ற பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த விபத்து நடந்த மொரானா பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படையை சேர்ந்த விமானம் விழுந்து விப்துத்துக்குள்ளானதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ராஜஸ்தான் மாநிலம் உச்செயின் என்ற பகுதியில் திறந்த வெளியில் விமானம் ஒன்று விழுந்து தீப்பற்றி எரித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்துக்கள் மோசமான வானிலையினால் ஏற்பட்டிருப்பதாக முதல்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்தடுத்து விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.