2022 ஐபிஎல் [போட்டியில் அகமதாபாத், லக்னோவை தலைமையிடமாக கொண்ட அணிகள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அணிகளுக்கான ஏலம் வரும் 25ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தற்போது ஐபிஎல்-லில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் அகமதாபாத், லக்னோவை தலைமையிடமாக கொண்ட அணிகள் வரும் 2022 ஐபிஎல் தொடரில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏலம் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி ஐபிஎல் 2022 தொடரில் புதிய அணிகள் இணைவதன் மூலம் பிசிசிஐ அமைப்பிற்கு 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் வரலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் பங்கு கொள்ள குறைந்தபட்சம் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருட வருமானம் இருக்க வேண்டும். ஒரு அணியின் குறைந்த பட்ச ஏலத்தொகை 2 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.