தமிழகம்செய்திகள்வானிலை

குளத்தில் கரை உடைந்து வயலுக்குள் புகுந்த நீர் – விவசாயிகள் கவலை!

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குளத்தில் கரை உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்கள் வழியாக வெள்ள நீர் வெளியேறி வருகிறது.

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர், கூடக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் நீர் தேக்க குளம் ஒன்று உள்ளது.  இந்த குளத்தில் சேகரமாகும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நேற்று இரவு நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பெய்த கன மழை காரணமாக
வரப்பாளையம்,  கொண்டயம்பாளையம் , இருகாலூர் வழியாக  வருகின்ற உபரி நீர் கூடக்கரை அருகே உள்ள குளம் வழியாக  வெளியேறி வந்த நிலையில்,  தற்போது வெள்ள நீர் அதிகமான நிலையில் கரை உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் வழியாக வெள்ள நீர் வெளியேறி வருகிறது.  இதனால், அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருக்கும் நெற்பயிக்கள் நீரில் மூழ்கியுள்ளது.

மேலும் கனமழையால்,  அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்,பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சிங்கப்பூரில் எனக்கு ஹோட்டல் இருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: கடம்பூர் ராஜு

G SaravanaKumar

“தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்” – அன்புமணி இராமதாஸ்

EZHILARASAN D

வீடு கட்டும் திட்டம்: தமிழக அரசின் பங்கு தொகையை உயர்த்திய முதல்வர்

Saravana

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading