“தேர்தலுக்கு பிறகு திமுக கட்சியே இருக்காது” – முதல்வர் பழனிசாமி

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, திமுக என்ற கட்சியே இருக்காது என, தஞ்சை பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் துணை…

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, திமுக என்ற கட்சியே இருக்காது என, தஞ்சை பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோதுதான், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாக குறிப்பிட்டார்.

மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அதிமுக அரசு முற்றுப்புள்ளி வைத்ததாக கூறிய முதலமைச்சர், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததன் மூலம், டெல்டா மாவட்டங்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை அதிமுக அரசு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு அதிமுக அரசு செய்த நன்மைகளை சரித்திரம் போற்றும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், கொரோனா காலத்திலும் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதாக கூறினார். பல்வேறு துறைகளில் அதிமுக அரசு விருதுகளை குவித்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.