அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்…

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ளது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், கட்சியின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்த திட்டமிடல்கள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.