கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர் வெங்கட் சுபா மரணமடைந்தார்.
கொரோனா 2 அலை காரணமாக, ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல குணச்சித்திர நடிகர் வெங்கட் சுபா இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இவர், மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல், காதலில் விழுந்தேன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரியமானவளே, திருமகள் உட்பட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடித்து விரைவில் வெளிவரவுள்ள ’பிரண்ட்ஷிப்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த அவர், இன்று அதிகாலை மரணமடைந்தார். இதை வெங்கட் சுபாவின் நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா உறுதி செய்துள்ளார்.
‘என் நண்பன், சிந்தனையாளன், எழுத்தாளன், படைப்பாளி, நடிகர் வெங்கட் 12.48க்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை தாள முடியாத வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன். வெங்கட், என் வாழ்நாளில் நான் அதிகம் அழைத்த நண்பனின் பெயர். 36 வருடங்கள் ஆயிரமாயிரம் நினைவுகள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியிலும் தோல்வியிலும் உடன் இருந்தவன். தடுப்பூசி போடச் சொல்லியும் கேட்கவில்லை. அதுதான் ஆஜானுபாகுவாக, ஆரோக்யமாக இருந்த வெங்கட்டை கண்ணுக்கு தெரியாத கிருமி எங்களிடமிருந்து பிரித்துவிட்டது என்று தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்துள்ளார்.
வெங்கட் சுபா மறைவுக்கு ஏராளமான திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.