மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில், கால்நடைகளால் 193 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 103 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆர்டிஐ அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளாலால் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மதுரை மாவட்டத்தில் கால்நடைகள் மூலம் ஏற்படும் விபத்துக்கள் குறித்து நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மருதுபாண்டி ஆர்டிஐ மூலம் மதுரை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு காவல்துறை அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை மாநகர் பகுதியில் மட்டும் கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் கால்நடைகளால் 20 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சுமார் 173 விபத்துகளில் 94 பேர் உயிரிழந்ததாகவும், குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மாவட்ட முழுவதும் சுமார் 193 சாலை விபத்துக்கள் கால்நடைகள் மூலம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 103 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 134 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஆர்டிஐ அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.
இதையும் படியுங்கள் : PS1 வசூலை எட்ட முடியாமல் தவிக்கும் PS2 – லேட்டஸ்ட் அப்டேட்!
அதிகபட்சமாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 128 விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதன்மூலம் சுமார் 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆர்டிஐ மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கால்நடைகளை பரிந்துரை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.