குற்றம் தமிழகம் செய்திகள்

ஆண்டிபட்டி அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட மதுபான பார்களுக்கு சீல்!

ஆண்டிபட்டி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஐந்து மதுபான பார்களுக்கு  காவல்துறையினர் சீல் வைத்தனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாமாக அரசு மதுபான கடைகளை ஒட்டி சட்டவிரோதமாக மதுபான பார்கள் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தன. இப் புகார்கள் குறித்து காவல்துறையினரும் அவ்வப்போது திடீர் சோதனை செய்து மதுபான பார்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்கிடையே தமிழகத்தில் மரக்காணம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழக அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், சட்டவிரோத செயல்படும் மதுபான பார்களை மூடவும் காவல்துறையினருக்கு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கிடையே இதன் தொடர்ச்சியாக ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மூலக்கடை,வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ஐந்து இடங்களில் சட்டவிரோதமாக மதுபான பார்கள் செயல்பட்டு வருவது தெரிவந்தன.

அப்போது சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஐந்து மதுபான பார்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்து மூடினர்.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘நீட் விலக்கு தமிழக மக்களின் விருப்பம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Web Editor

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு: 475 பேர் உயிரிழப்பு!

Halley Karthik

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பீகார் குழு

Web Editor