24 C
Chennai
December 4, 2023
தமிழகம் செய்திகள்

வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் ஆதார் மையம்; கிராம மக்கள் அவதி!

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த அரசு கேபிள் டிவி நிர்வாகத்தின் ஆதார் மையம் கடந்த  2 மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதால் கிராம மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இதனால் பள்ளி , கல்லூரிகளில் சேர்வதற்காக மாணவர்கள் புதிதாக ஆதார் பதிவு செய்ய மற்றும் திருத்தம் செய்ய முடியாமல் 50-ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதன் எதிரொலியாக நிலக்கோட்டை தபால் நிலையத்தில் மக்கள் ஆதார் எடுக்க குவிந்து வருகின்றனர்.

ஆனால் நாள் ஒன்றுக்கு 30 – நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு புதிய ஆதார் மற்றும் திருத்தம் செய்யப்படுவதால் மக்கள்  கடும் பாதிப்புக்கு  உள்ளாகின்றனா். மேலும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் என மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது குறித்து வட்டாட்சியரிடம் கேட்ட போது ” அரசு கேபிள் டிவி வட்டாட்சியருக்கு பாிந்துரைத்துள்ளதாகவும் , உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

2 மாதங்களாகவே பூட்டிக் கிடப்பதால் வருவாய்த்துறை இது குறித்து கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் , அலட்சியம் காட்டாமல் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

——-ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy